அமைச்சர் இருக்கையை அலங்கரிக்கும் ரோஜா!கனவு நனவானது!

அமைச்சர் இருக்கையை அலங்கரிக்கும் ரோஜா!கனவு நனவானது!

வித்யா,

 இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அது சமயத்தில் புதியவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என அப்போதே உறுதி அளித்திருந்தார்..

 அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆந்திராவின் 24 அமைச்சர்களும் இராஜினாமா செய்தனர்,

இந்நிலையில் இன்று 25 அமைச்சர்கள் பதவியேற்றனர், அதில் பழைய அமைச்சர்கள் 10 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது,

புதிதாக 15 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இன்று பதவியேற்றனர்,

 அப்படியிருக்க அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  நடிகை ரோஜா அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார்..

இவர் நகரி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்,

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் இன்று அவரது கனவு நனவாகியுள்ளது.