மண்டபத்தை இடிக்க மக்கள் எதிர்ப்பு! கவுன்சிலர் சப்போர்ட்!

  ஆ.ராஜேஷ் குமார்,

  சென்னை மேற்குமாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை இந்து அறநிலையதுறை கையகப்படுத்த போவதாக வந்த செய்தி அறிந்து மண்டபத்தின் உள்ளேயும் வெளியேயும் அன்பர்கள் பக்தகோடிகள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்

  இதையறிந்த மாம்பலம் 134வது வார்டு கவுன்சிலர் உமா ஆனந்த் அங்கு வந்து ரோட்டில் நாற்காலி போட்டு உட்கார்ந்து  போராட்டத்தை வலுப்படுத்தினார்.

  அவருடன் பொதுமக்களும் கலந்து கொண்டு போராடினர்.

ஆனால் இந்த நடவடிக்கையானது நீதிமன்ற உத்தரவின் பேரில் தான் எடுக்கப்பட்டது என அலுவலர்கள் சொன்னார்கள்.

ஆனால் அங்கு கூடியிருந்தவர்கள் அதை காது கொடுத்து கேட்கத் தயாராக இல்லாததால் போலிசார் குவிக்கப்பட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.