செலவு செய்து விளம்பரங்கள் தரவேண்டாம்:- அமைச்சர் ஆர்.க்ந்தி வேண்டுகோள்!

ஜி.கே.சேகரன்,
செலவு அதிகம் செய்து விளம்பரங்கள் கொடுப்பதைவிட பொது மக்களுக்கு சேவை செய்ய முன் வாருங்கள் மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி - சிறுவர் பூங்கா திறப்பு விழாவில் பேச்சு
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் குடியிருப்பு வாரியம் பகுதியில் தனியார் நிறுவனமான எம்.ஆர்.எப் நிறுவனத்தின் முழு பங்களிப்புடன் புதியதாக 50 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.
இப்பூங்காவின் திறப்பு விழாவனது மாவட்ட ஆட்சியர் திரு.பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்துக் கொண்டு புதிய சிறுவர் பூங்காவினை ரிப்பன் வெட்டி திறந்த வைத்தார்.
பின்னார் பூங்காவை சுற்றி பார்த்த அமைச்சர் பூங்காவில் மரக்கன் நட்டு சிறப்பித்தார்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் காந்தி இது போன்று தானியார் நிறுவனமான எம்.ஆர்.எப் நிறுவனம் சிறுவர் பூங்கா அமைத்து கொடுத்ததுபோல் பொது மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் இன்னும் பல நிறுவனங்கள் முன் வர வேண்டும் எனவும், தேவையில்லாமல் விளம்பரங்கள் கொடுத்து செலவு செய்வதைவிட இதுபோல் பொது மக்களுக்கு சேவை செய்யுங்கள் என பேசினார்.