திருவாரூர், வேலூர் மாவட்டங்களில் ஜாக்டோ-ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம்!
க.பாலகுரு, கு.அசோக்,
திருவாரூர் மாவட்டம், ஜாக்டோ-ஜியோ சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் திருவாரூர் நகராட்சி அலுவலகம் முதல் பழைய பேருந்து நிலையம் வரையில் நடைபெற்றது. இதில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்த்தப்பட்டது.
இதில் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
ஊதிய முரண்பாட்டை கலைந்திட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், காலமுறை ஊதிய வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பே.சோமசுந்தரம், ஆர்.முத்துவேல்,சா.சண்முகவடிவேல்,ஆர்.சத்தியமூர்த்தி, மணிமாறன் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில உயர்நிலைக் குழு உறுப்பினர் மாநில தலைவர் பெ இரா. இரவி மற்றும் தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம்-மாநில உயர்நிலைக் குழு உறுப்பினர் மாநில பொருளாளர் எஸ்.துரைராஜ், மாவட்டச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட 1500 க்கும் மேற்பட்ட மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்
அதே போல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.இந்த மனித சங்கிலி போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட, ஒப்பந்த முறையை கைவிட, கால முறை ஊதியத்தில் காலி பணியிடங்களை நிரப்பிட, தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும், தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை காலம் முறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும், முறையை கைவிட வேண்டும் பிடித்த 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஜாக்டோ ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.