சமூக ஊடகங்களுக்கு பட்ஜெட்டில் கிடுக்கிபிடி!

ஆர்.ராஜேஷ் குமார்,
பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார். அப்போது கூடுதல் தலைமைச்செயலாளர் முருகானந்தம் இ.ஆ.ப.அவர்கள் உடனிருந்தார்.
நீர்வளத் துறைக்கு ரூ.7,338.86 கோடி ஒதுக்கீடு.
பட்ஜெட்டில் வானிலை மேம்பாட்டு பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.
ரூ.20 கோடியில் வள்ளலார் கால்நடை பாதுகாப்பகங்கள் அமைக்கப்படும்.
கொற்கையில் ரூ.5 கோடி மதிப்பில் கடல் ஆய்வு மையம் அமைக்கப்படும்.
சுய உதவிக் குழுக் கடன், விவசாய பயிர்க் கடன் வழங்க ரூ.4,130 கோடி ஒதுக்கீடு.
சமூக ஊடகங்களில் தவறான பிரசாரத்தை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்.
போன்ற சிறப்பம்சங்ளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.