.கவுன்சிலருக்கு போட்டியிடும் குள்ள மனிதர்! குவியும் பாராட்டு!

டி.முகமது இர்பான்,
நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், உயரத்தில் குள்ளமான மனிதர் ஒருவர் போட்டியிடுகிறார். அவருடைய தன்னம்பிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் நகராட்சி, வார்டு 17 ல் சோஷியல் டொமாக்கரட்டிவ் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) கட்சியின் உறுப்பினரான சவுகத் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
பின்னர், மேற்படி சவுகத் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள 17-வார்டில் என்னென்ன குறைகள் உள்ளது, அவற்றை எவ்வாறு தீர்த்து வைப்பேன் என்று அவர் தெரிவித்தார்.
அடிப்படை தேவைகளை அக்கறையோடு செய்வேன். குடிநீர் விநியோகம் சீராக இருக்க நடவடிக்கை எடுப்பேன்.
குறிப்பாக குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு அளிக்கப்படும்.
எங்கள் வார்டில் கழிவுநீர் கால்வாய்கள் முழுமையாக சீரமைக்கப்படும்.
மேலும் இங்கு காலியாக உள்ள பொது இடங்களில் பொழுது போக்கு பூங்காக்கள் அமைத்து சிறார்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் நிறுவி புத்துணர்ச்சி அளிக்கப்படும்.
இதற்கான நிதி தேவைக்கு எங்கள் ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் உதவிட தயாராக உள்ளார்கள். அவர்கள் மக்களின் நியாயமான தீர்வுகளுக்கு உதவிக்கரம் அளிப்பார்கள்.
அதை நான் முறையாக கையாள்வேன் என்றார்.
சவுகத்தின், தன்னம்பிக்கையையும், வாக்குறுதிகளை குறித்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.