நீதிபதியின் நாக்கை அறுப்போம்!திண்டுக்கல் பரபரப்பு!

நீதிபதியின் நாக்கை அறுப்போம்!திண்டுக்கல் பரபரப்பு!

 உ.சசிகுமார்,

   நீதிபதியின் நாக்கை அறுப்போம் என்று திண்டுக்கல் காங்கிரஸ்காரர் ஒருவர் பொது வெளியில் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.        

   பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ராகுல் காந்தியை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டங்களை நடத்தி வருகிறது.

  அப்படியிருக்க, திண்டுக்கல் மாநகர் மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   அந்த ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் பேசுகையில், மக்கள் அமைதியாக இருக்கின்றார்கள் என நினைக்கிர்களா? மக்கள் அனைவரும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார்கள்.

  ராகுல் காந்தியை சிறை தண்டனைக்கு அனுப்ப வேண்டும் என நினைக்கின்ற பாஜக அரசை நாட்டை விட்டு வெளியேற்றுவோம். காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ராகுல்காந்திக்கு எதிராக தீர்ப்பு கூறிய நீதிபதியின் நாக்கை அறுப்போம் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

  இதற்காக அந்த மாவட்ட நிர்வாகம் இதுவரை வழக்கு ஏதும் பதியவில்லை என்று தெரிகிறது.

  குறிப்பு:-வயநாட்டில் உள்ள எம்.பி.அலுவலகத்தில் டெலிபோன் மற்றும் இன்டெர்நெட் இணைப்பு ஆகியவற்றை அரசு கட் செய்திருக்கிறது.