ஆன்லைனில் சிமென்ட் விலை ரூ.216/-தமிழக அரசு அறிமுகம்!

ம.பா.கெஜராஜ்!
கட்டுமானத்துறையில் சிமென்ட் நிறுவனங்களின் ஆளுமையை தவிர்ப்பதாக தமிழகஅரசே 'வலிமை' என்ற பெயரில் புதிய சிமென்ட் விற்பனையை இன்று தொடங்கியது.
சிமென்ட் கழகத்தின் உயர் தர வலிமை சிமென்ட்டை அறிமுகப்படுத்தி அதன் விற்பனையை துவக்கி வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் இருந்தார்.
மேற்படி மலிவுவிலையில் துவங்கப்பட்டிருக்கும் 'வலிமை' சிமென்ட் எதற்காக துவங்கப்பட்டது என்பதற்கான சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதன் இணையதளத்தில் பதிவு செய்துள்ள தகவல்களின்படி, மாநிலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட 26 அங்கீகாரம் பெற்ற சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.
அவற்றில் ஒவ்வொறு நிறுவனமும் ஒரு விலையை நிர்ணயித்து விற்றுக் கொண்டிருக்கின்றன.
அவையாவும் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக உணரும் அரசு வலிமை சிமென்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இரு வேறு தரத்தின் அடிப்படையில், திறந்தவெளி சந்தையில் ரூ 350, ரூ. 360 என்ற இரு விலையில் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிமென்ட் விலை 4.7 சதவீதம் உயர்ந்தது. நிலக்கரி பற்றாக்குறை, நிலக்கரி இறக்குமதி மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான அதன் போக்குவரத்து செலவினம் காரணமாக சிமென்ட் விலை உயர்ந்ததாக விற்பனை நிறுவனங்கள் கூறின.
2.வலிமை சிமென்ட் தயாரிப்பின் திட்டப்படி தொடக்கத்தில் மாதந்தோறும் 30 ஆயிரம் டன் அளவுக்கு சிமென்ட் விற்பனை செய்யப்படும். அவை சந்தை சில்லறை விலையைவிட குறைவான விலைக்கு விற்கப்படும். ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள அரசு சிமென்ட் மாதந்தோறும் வெளிச்சந்தையில் 90 ஆயிரம் டன் சிமென்டை விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
- மேற்படி வலிமை சிமென்ட், டான்செம் என்ற மாநில பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு சிமென்ட் கழகத்தால் தயாரிக்கப்படுகிறது. வலியதோர் உலகம் செய்வோம் என்ற கருத்துருவை மையமாகக் கொண்டு இந்த சிமென்ட் தயாரிக்கப்படுகிறது. இந்த டான்செம் நிறுவனம் ஏற்கெனவே அரசு சிமென்ட் என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் விற்கும் சிமென்டை விட குறைவான விலையில் சிமென்ட் தயாரித்து விற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- சிமென்ட் தயாரிப்புத் துறையில் குறிப்பிட்ட சில தினியார் நிறுவனங்களே உயர்தர தயாரிப்பை விற்பதில் ஏகபோகம் செலுத்தி வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் ஒரு சிமென்ட் மூட்டை ரூ. 470 முதல் ரூ. 490 வரை விற்கப்பட்டது. அரசு தலையிட்ட பிறகு இந்த விலை ரூ. 440 முதல் ரூ. 450 ஆக குறைந்தது.
- தமிழக பொதுத்துறை நிறுவனமான டான்செம் சிமென்ட் ஆலைகள் அரியலூர் மற்றும் ஆலங்குளத்தில் உள்ளன. அவற்றின் மூலம் கடந்த ஆண்டு மட்டும் 8.13 லட்சம் டன் சிமென்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சிமென்ட் மீதான தேவை அதிகரிப்பதால், தயாரிப்பு அளவை 15 லட்சம் முதல் 17 லட்சம் டன் வரை அதிகரிக்க டேன்செம் திட்டமிட்டுள்ளது.
- தனி நபர் ஒருவர், அவரது ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கும் மிகாமல் இருந்தால் அவர் தனது புதிய வீடு கட்டுமான பணிக்காக 750 மூட்டைகள் வரை அரசு தயாரிப்பு சிமென்ட் மூட்டைகளை வாங்கலாம். இந்த சிமென்ட் மூட்டைகளை ஆன்லைன் மூலமாக மூட்டை ஒன்றுக்கு ரூ. 216 செலுத்தி வாங்க முடியும்.
- அரசு தயாரிப்பு சிமென்ட் வாங்க வேண்டுமானால், தான் வீடு கட்டுமான பணிக்காக சிமென்ட் மூட்டை வாங்குகிறேன் என்பதை அத்தாட்சி செய்யும் உள்ளூர் கிராம அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளரின் சான்றிதழ் அல்லது கடிதத்தை ஆன்லைன் ஆர்டர் செய்யும்போது பதிவேற்ற வேண்டும்.
- தமிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா சிமென்ட் என்ற பெயரில் மலிவு விலை சிமென்டை டான்செம் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வந்தது.னது இனி காணாமல் போகும்.
- அரசு தயாரிப்பு சிமென்ட் மூட்டைகளின் விலை குறைந்து விற்கப்படுவதால், வெளிச்சந்தையில் தனியார் சிமென்ட் நிறுவனங்களும் அவற்றின் விற்பனை விலையை குறைக்கலாம் என்று எதிர்பார்ப்பு உள்ளது.
குறிப்பு:-முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (16.11.2021) தலைமைச் செயலகத்தில் தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு . என் . சீனிவாசன் அவர்கள் சந்தித்து , சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். 2021 டிராப்பியை வெற்றி பெற்றதையொட்டி 20.11.2021 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினார்.