ஆர்ட்ஸ் காலேஜ் அளித்தமைக்கு நன்றி:-வேலூர் மாவட்ட ஊராட்சி கூட்டதில் தீர்மானம்!

கு.அசோக்,
வேலூர் மாவட்ட ஊராட்சியின் முதல் கூட்டம் மாவட்ட ஊராட்சித்தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது
வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் முதல் கூட்டமானது மாவட்ட ஊராட்சியின் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் கலந்துகொண்டு பேசினார்.
இதில் வேலூரில் இலங்கை தமிழர்களுக்கு 225 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி துவங்கி வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், அனைக்கட்டு தொகுதியில் கலை அறிவியல் கல்லூரி மற்றும் டைடில் பார்க் அமைத்திட அனுமதியளித்த அரசுக்கு மாவட்ட ஊராட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்தும் 2021-2022 ஆம் ஆண்டு மாவட்ட ஊராட்சிக்கு வரப்பட்ட மாணிய நிதிகுழு மாண்ய தொகையிலிருந்து மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பரிந்துரை அளிக்கும் பணிகளை எடுத்து செய்ய மன்றம் அங்கிகரிக்கிறது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.