முதல்வர் பிறந்த தினம் ; வாணியம்பாடி நகரத்தில்பிரியாணி போட்டு கொண்டாட்டம்!

முதல்வர் பிறந்த தினம் ; வாணியம்பாடி நகரத்தில்பிரியாணி போட்டு கொண்டாட்டம்!

நூ.அ. தபு

வாணியம்பாடி நகர திமுக சார்பில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த விழா கருணை இல்லத்தில் மதிய உணவு வழங்கி கொண்டாடினர்.

வாணியம்பாடி, மார்ச்.1-  திருப்பத்தூர் மாவட்டம்,  வாணியம்பாடி நகர திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த விழா பெருமாள்பேட்டை பகுதியிலுள்ள கருணை இல்லத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலாளரும், நகர கூட்டுறவு வங்கி தலைவருமான வி.எஸ். சாரதிகுமார் தலைமை தாங்கினார். நகர மன்ற உறுப்பினர்கள் ரஜினிகாந்த், ஆஷா பிரியா குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி நகரமன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் கலந்துகொண்டு கருணை இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள் மற்றும் மனநலம் குன்றியோருக்கு,  மதிய உணவாக பிரியாணி வழங்கினார். 

நிகழ்ச்சியில் கருணை இல்ல நிர்வாகி டேவிட் சுபாஷ் சந்திரன்,நகரமன்ற துணைத் தலைவர் கயாஸ் அஹமத்,நகர மன்ற உறுப்பினர்கள் கலைச்செல்வன், தவுலத், சுல்தானா சமி, ஷாஹீன்பேகம் சலீம், பத்மாவதி மற்றும் நகர திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில்  நகர தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் நன்றி கூறினார்.