வேட்பாளர்களின் மனுவை தள்ளுபடி செய்ய சதி! அ.தி.மு.க.அச்சம்!!

வேட்பாளர்களின் மனுவை தள்ளுபடி செய்ய சதி! அ.தி.மு.க.அச்சம்!!

   D.நெல்சன்,

  தேர்தல் விதிமுறையை திமுக மீறுவதாகவும் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும் - தேர்தலை நியாயமாக நடத்த கோரி அதிமுக புகார் மனு

    வேலூர்மாவட்டம்,வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமாரிடம் அதிமுக வேலூர் மாவட்ட செயலாளர் அப்பு வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலசந்தர் ஆகியோர் கூட்டாக கட்சி நிர்வாகிகள் மூர்த்தி உள்ளிட்ட் நிர்வாகிகளுடன் சென்று புகார் மனுவை அளித்தனர்.

 அந்த புகார் மனுவில் வேலூர் நகர்புற உள்ளாட்ச்சியில் திமுகவினர்  அதிமுக வேட்பாளர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென தேர்தல் நடத்தும் அதிகாரிகளை மிரட்டி தள்ளுபடி செய்ய வைக்க திட்டமிட்டுள்ளனா.

  இதனால் தேர்தலை நியாயமாக நடத்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  திமுகவினர் தற்போதே அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அண்ணா பிறந்தநாளான நேற்று பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணாசிலையின் பூட்டை உடைத்து தேர்தல் விதிமுறையை மீறி அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் பூட்டை உடைத்து சட்டவிதிகளை மீறி மாலை அணிவித்தனா.

ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்

உடனடியாக அவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென அந்த மனுவில் கோரியுள்ளனர்.

  அப்போது காட்பாடி கே.எஸ்.சுபாஷ், முன்னாள் கவுன்சிலர் நாகு (எ)நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.