டி.யூ.ஜே வில் இருந்து விலகினேன்! மூத்த செய்தியாளர் மடல்!

டி.யூ.ஜே வில் இருந்து விலகினேன்! மூத்த செய்தியாளர் மடல்!

 த.நெல்சன்,

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவராகிய பி.ஆர்.சுப்பிரமணியன் என்பவர் வேலூர் மாவட்டம் பேர்னாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர். பி. ஆர். எஸ்ஸென்றால் பலருக்கும் தெரியும்,

  கம்யூனிச கொள்கைபிடிப்பாளரான அவர் பத்திரிகையாளர்களுக்கான சங்கங்களில் ஒன்றான டியூஜே எனப்படும் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தில் பல்வேறு பதவியை வகித்தவர்.

  இந்நிலையில் அந்த சங்கத்தை துவக்கியவர் செத்துவிட்ட நிலையில் சங்கத்தை யார் நடத்துவது என்கிற போட்டா போட்டி ஏற்பட்டு ஆளுக்கு ஒருபக்கமாய் பிரிந்தனர். இவர் ஒருபக்கமாய் நம்பி ஒதுங்கி பணிகளை மேற்கொண்டு வந்தார்.

  இந்நிலையில் ...தோழர்களே என்று ஒரு பரபரப்பு அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

 அதன் விவரம் வருமாறு,

 என்னோடு டி யூ ஜே வில் பயணித்த அனைவருக்கும் வணக்கம்.

கடந்த பல ஆண்டுகளாய் நான் டி யூ ஜே வில் வைத்த பல்வேறு விமர்சனங்களை மாநில தலைமை ஏற்காமல் கருத்தும் கூறாமல் உண்மைகளை மறைத்து தவறான தகவல்களை உறுப்பினர்களுக்கு தருவதிலே கவனம் செலுத்தி வருவதை நான் சுட்டிக் காட்டியும் எந்த பலனுமில்லை.

மாநில நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டாமல் விரிவடைந்த மாநில நிர்வாகிகள் கூட்டம் என்ற பெயரில் சடங்குத்தனமான கூட்டம் நடத்துவது

டி யூ ஜே அமைப்பின் விதிகளை உறுப்பினர்கள் அனைவருக்கும் இதுவரை தராமல் இருப்பது எந்த வகையில் நியாயம்.

டி.யூ.ஜெ  சங்கத்தின்  வழக்கினை பற்றி அறிக்கையாக வைக்க வேண்டும்

மாநில அமைப்பின் வரவு செலவு கணக்கை அமைப்பு விதிகளின்படி வெளியிட வேண்டும்.

மாவட்ட அளவில் ஒரு ஆண்டு சந்தா கட்டாதவர்களை நாம் சங்க உறுப்பினர்களாக அங்கீகரிப்பதில்லை ஆனால் ஆண்டு கணக்கில் சந்தா கட்டாதவர்கள் மாநில நிர்வாகிகள் என தலைமை அறிவிப்பது எந்த விதமான ஜனநாயகம்.

விமர்சனம் செய்பவர்களை பழிவாங்கும் போக்கு சமூக பார்வை உள்ள தலைமைக்கு அழகல்ல. எனவே நான் டி யூ ஜே அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகிக் கொள்கிறேன். வேதனையுடன்

உங்கள் அன்பிலசையும்பி .ஆர்.எஸ்

மாநில அமைப்புச் செயலாளர். என்று குறிப்பிட்டுள்ளார்.

  நாம் அறிந்தவரை டியூஜே என்கிற பெயரில் தொழிலாளர் நல ஆணையம், மற்றும் நீதிமன்றம் போன்றவற்றின் மூலம் முறைப்படி திரு.வி.இ.எஸ்.ஜார்ஜ் என்பவர் தான் அனைத்து உரிமைகளையும் பெற்றிருப்பதாக தெரிகிறது.