பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார்:-பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி!

க.பாலகுரு,
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களைப் பற்றிய உண்மை அறிவிப்பு என்று அவர் உயிரோடு இருப்பதாகஉலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளரிடம் அவர் இவ்வாறு சொன்னார்.
அவர் கூறியதாவது,
தஞ்சாவூர். செய்தியாளர்
.தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் உள்ளார்
பழ. நெடுமாறன் அறிவிப்பு.
தஞ்சாவூர்: தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார் என்றார் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன்.
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளரிடம் அவர் திங்கள்கிழமை காலை தெரிவித்தது:
சர்வதேசச் சூழலும், இலங்கையில் ராஜபட்ச ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத் தேசியத் தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்.
தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.
விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை.
இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும், எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும், இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப்பார்த்து, அதனைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம்.
இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்குத் துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம் என்றார்
இந்நிலையில் இலங்கை ராணுவத்தின் சார்பில் தெரிவித்திருப்பதாவது, பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு இறந்துவிட்டார் அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என்று தொலைக்காட்சி வாயிலாக கூறி இருக்கிறார்கள்.
அதேபோல் ஆதாரப்பூர்வமற்றதாக ஒரு தகவலை விடுதலைப்புலி பிரபாகரன் மையப்படுத்தி நெடுமாறன் சொல்லி இருப்பது ஏற்புடையது அல்ல.
என்னுடன் தொடர்பில் உள்ள போராளிகள் இதுபோன்ற செய்தியை சொல்லவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தெரிவித்துள்ளார்.
தனது பிள்ளை பாலச்சந்தரை இழந்துஇத்தனை நாள் அண்ணன் பிரபாகரன் அவர்கள் மறைவாக இருப்பார் என்று சொல்வது ஏற்புடையது அல்ல என்று சீமான் கூறியுள்ளார்.
அவர் உயிரோடு இருந்தால் நலம் தான் அப்படி இருந்தால் நானும் அவரை சென்று சந்தித்து வருகிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்து இருக்கிறார்.
நெடுமாறன் அவர்களுடைய அறிவிப்பு பல்வேறு தரப்பில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிற நிலையில் சிபிஐ இதை விசாரிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.