இராணிப்பேட்டை எஸ்.பி.இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார்! பொய்...மொட்டைகடிதம் என்று பதில்!

ம.பா.கெஜராஜ்,
இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையில் தனிப்பிரிவு ஆய்வாளராக இருப்பவர் சசிகுமார், அவரைப்பற்றி அவ்வப்பொழுது சர்ச்சைகள் வெளியாகி பின்னர் அமுங்கிவிடும்.
அந்த வகையில் கடந்த ஆண்டு ஆயுதப்படை பெண் போலிஸ் கோகிலா என்கிற பெயரிலும், காவலர் ராஜேஷ் என்கிற பெயரிலும் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குனர் அவர்களுக்கு புகார்கள் பறந்தன. அவையாவும் மேற்படி இன்ஸ்பெக்டர் சசிக்குமாரை மையப்படுத்தியே இருந்தது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது,
ஐயா வணக்கம்
இராணிப்பேட்டை மாவட்டம் எஸ்.பி.இன்ஸ்பெக்டர் அவர்கள் சென்னையில் உள்ள காவல்நிலையத்தில் வேலை செய்யும் போது லஞ்ச ஒழிப்பு துறை போலிசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
லஞ்ச பணம் வாங்கும் போது அவர் பிடிபட்டார்.
ஆகவே அவரை ஜெயில் அடைத்தனர்.
அது மட்டும் இல்லாமல் 6 வருஷம் திருவண்ணாமலையில் இன்ஸ்பெக்டராக இருந்தார்.
அதோடு அவர் சமுதயாதய அடிபடையில் மற்றும் அதிகாரி துணையோடு திருவண்ணாமலை -யில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் போது ஒரு பெண் ஆய்வாளர் விட்டில் புகுந்து தவறாக நடக்க முயன்றார்.
குடித்து விட்டு இவ்வாறு நடந்து கொண்டார் என்று புகார் எழுந்தது,
அந்த பிரச்சனை பேப்பரில் எல்லாம் வந்தது அது மட்டும் இல்லாம் அவருக்கு இரண்டு மனைவிகள் என்று தெரியவருகிறது ஒன்று வேலூரில் இரண்டவாது சித்தூர் என்று தெரியவருகிறது.
அதோடு திருவண்ணாமலை எஸ்.பி.இன்ஸ்பெக்டர் விடுப்பில் சென்றாதல் அந்த பணியிடம் பணியிடம் காலியாக இருந்தது. அதையறிந்துக் கொண்டு சமுதாய துனையோடு எஸ்.பி.இன்ஸ்பெக்டர் ஆக உலா வந்தார்.
அதற்கு பிறகு பணிஷ்மெண்டில் வேலூரில் இருந்தவர் பின்னர், இராணிப்பேட்டையில் எஸ்.பி.இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக இருந்தது தெரிந்து கொண்டு மீண்டும் சமுதாய அடிப்படையில் அப்பதவியை அடாவடியாக பிடித்தார் என்கிற சங்கதிகள் அந்த கடிதத்தில் இருந்தது.
இது குறித்து காவல் துறை வட்டாரத்தில் சிலரிடம் பேசியதில், ஆயுதப்படை பெண்களை இவர் உடலமைப்பை மையப்படுத்தி பேசுவார் என்றும், பெண் போலிசாரைப் பார்த்து உங்க வீட்டுக்காரர் எத்தனை மணிக்கு வருவார் போவார் என்று உள் அர்த்தத்தோடு கேட்பார் என்றும் புகார்கள் சொல்லப்பட்டது, மற்றபடி கடிதத்தை பொறுத்தவரை அது மொட்டை கடிதமாகும் என்றனர்.
சர்ச்சைக்கு ஆளாக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் சசிகுமாரிடம் பேசினோம்.
அந்த கடிதத்தில் குறிப்பிட்டதைப்போல கோகிலா ராஜேஷ் என்பவர்கள் இங்குள்ள போலிசில் இல்லை. அதே போல் அதில் கூறப்பட்டிருக்கும் சங்கதிகள் அனைத்துமே பொய் ஆகும்.
என் பணியைப் பற்றியும், என் நடத்தை மற்றும் கடமையுணர்வு பற்றியும் உயர் அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும்.
இப்படி ஆண்டுக்கு ஒருதரம் என் மீது அபாண்டமாக வீண்பழி சுமத்தி வருகிறார்கள். அவர்கள் யார் என்று எனக்கு தெரியும், அதைப்பற்றி இப்போதைக்கு ஒன்றும் சொல்லவேண்டாம் என்றார்.