ஒன்பது டன் குப்பைகளை கொளுத்திய ஊழியர்கள்!

ஒன்பது டன் குப்பைகளை கொளுத்திய ஊழியர்கள்!

    கு.அசோக்,

 இராணிப்பேட்டைமாவட்டம்,சோளிங்கர் நகராட்சி வார்டுகளில் தினசரி சுமார் 9 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.  இதில் தெருக்கள் தோறும்  வீடுவீடாக  துப்புரவு பணியாளர்கள் மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள்  தரம் பிரித்து சேகரிக்கிறார்கள்.

 அதற்கென, திருத்தணி சாலையில் உள்ள திடக்கழிவு திரவக்கழிவு திட்டதத்தில் மக்கும்குப்பைகளை உரமாக்கவும் ,மக்காகுப்பைகளை மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது.

 அப்படியிருக்க, நகராட்சி முழுவதும் வைகக்ப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, பானாவரம் கூட்டு சாலை பகுதியில் உள்ள ஐப்ப சுவாமி கோவில் அருகே ஒன்றாக சேர்த்து வைக்கின்றனர்.

   மேற்படி ஏரியா மலைப்பகுதி ஆகும். எனினும், கடந்த 10 ஆண்டிற்கு மேலாக குப்பைகளை டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம்மங்கு கொட்டப்பட்டு  வருகிறாது.

     இந்நிலையில் அங்கு  மர்ம நபர்கள் அந்த குப்பை கிடங்கை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதில் சுமார் 80 நீளம்,  25அடி உயரத்திற்கு கொட்டப்பட்ட குப்பைகள் கருகி சாம்பளாயின.

   இதனால் அப்பகுதியில் உள்ள 50 க்ற்கும் மேற்பட்ட வீடுகள் புகைக்குள் மறைந்தது.

  மேலும், வீடுகளில் உள்ள  முதியோர்கள்  துர்நாற்றம் வீசிய புகையையால்  சுவாசிக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். பொதுமக்கள் கொடுத்த  தகவலின் பேரில்  தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள்  தீயில்  குப்பை எரிந்து கொண்டிருந்த பகுதிக்கு விரைந்து, தீயை கட்டுப்படுத்தும்  பணியில் ஈடுபட்டனர்.

    இரண்டுமணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அப்போது நகராட்சி ஆணையர் பரந்தாமன் துப்புரவு ஆய்வாளர் வடிவேல்,  மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர் .

    இந்த குப்பை கொட்டியுள்ள பகுதியில் இரண்டு ஏக்கர் பரப்பளவு குப்பைகள் கிடங்கு அமைக்கப்படும் என ஏற்கேனவே இருந்த மாவட்ட ஆட்சித்தலைவர்  பரிந்துரை செய்து இருந்தார் .ஆனால் இதுவரை குப்பை கிடங்கு அமைக்கவில்லை .

   குப்பைகளை இதேபோல அடிக்கடி மர்ம நபர்கள் கொளுத்துவது வாடிக்கையாக உள்ளது  இதனால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

   யார்தான் இதற்கு தீயிட்டனர் என்று விசாரித்த போது, ஊழியர்கள் தான் என்கிறார்கள் அப்பகுதிவாசிகள்.