நன்றாக புலனாய்வு செய்தமைக்காக எஸ்.பி.யால் கவுரவிக்கப்பட்ட போலிசார்!

நன்றாக புலனாய்வு செய்தமைக்காக எஸ்.பி.யால் கவுரவிக்கப்பட்ட போலிசார்!

 கு.அசோக்,

 2021-22 ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வு துறையில் சிறப்பாக பணியாற்றிய 22 காலர்களுக்கு பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை                  

 ஊராட்சி, தாயலூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி வளாக விடுதியில் காவலர்களுக்கு பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் 2021-22 ஆம் ஆண்டில் குற்றப் புலனாய்வுத் துறையில் சிறப்பாக செயல்பட்ட  போலிசார் இதில் கவுரவிக்கப்பட்டனர்.

  இந்த விழாவின் போது 2021- 22 ஆம் ஆண்டிற்கான கொலை கொள்ளை கற்பழிப்பு உள்ளிட்ட குற்ற புலனாய்வுத் துறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு உடனுக்குடன் பிரச்சினைக்கு தீர்வு கண்ட 22 காவலர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களை சிறப்பிக்கும் விதமாகவும், வருகின்ற  2022-23 ஆம் ஆண்டிற்கான  செயல்பாடுகளில் பங்கெடுத்துக் கொள்ளும் காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பாராட்டு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

 இந்த விழாவின் போது காவல் துறை சார்ந்த அதிகாரிகள் காவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.