நடுரோட்டில் பர்த்டே செலிப்ரேஷன்:- பள்ளி புள்ளிங்கோஸ் ஜாலி! அக்கம் பக்கத்தினர் வெறுப்பு!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் டோமினிக் சேவியர் நிதி உதவி பெறும் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஜெய்பீம் நகர் பகுதியை சேர்ந்த சரவணன் மகன் பன்னீர் (15) என்ற மாணவன் படித்து வருகிறான். அவனுக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடுரோட்டில் நின்று கொண்டு சைக்கிள் மீது கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
அதற்கு வசதியாக, மாணவர்கள் தங்களது புத்தகப் பைகளை ஒரு கேட்டின் மீது மாட்டிவிட்டு பர்த்டே செலிப்ரேஷனில் மூழ்கினர்.
இதனால் அக்கம் பக்கத்தினருக்கு இடைஞ்சல் ஏற்பட்டதாம். ஆகவே அதே பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் பள்ளி நிர்வாகத்திற்கு தொலைபேசியில் அழைத்து உங்களுடைய மாணவர்கள் இப்பகுதியில் தொல்லை கொடுத்து வருகின்றனர் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் எனவும் கூறினார்.
இதையறிந்த அந்த மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.