விடுவிக்கப்பட்ட நிதியை எங்களிடம் வசூலிப்பதா? ஊரக வளர்ச்சிதுறையினர் உண்ணாவிரதம்!

க.பாலகுரு,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலக சங்கத்தின் சார்பில் கருப்பு பேட்ச் அணிந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
திருவாரூரில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலக சங்கத்தின் சார்பில் கருப்பு பேட்ச் அணிந்து உண்ணாவிரத போராட்டம் மாவட்ட முழுவதும் பத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் பி.எம்.ஏ.ஒய் திட்டத்தில் 1151 வீடுகளுக்கு நிதி விடுவிக்கப்பட்ட தொகையினை அரசு அலுவலர்களிடம் திரும்ப வசூல்செய்திட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனை ரத்து செய்யக்கோரி நேற்று திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் பாரி, மாநிலத் துணைத்தலைவர் சௌந்தரபாண்டியன், மாநில செயலாளர் ஜம்ரூத்நிஷா, முன்னாள் மாநிலதுணைத்தலைவர் புஷ்பநாதன், உள்ளிட்டோர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
திருவாரூரில் ஆ.சிவனேசன் தலைமையிலும், நன்னிலத்தில் கே.கதிரவன், குடவாசலில் வ.பன்னீர்செல்வம், கொரடாச்சேரியில் ஜெ.கண்ணன், வலங்கைமானில் எஸ்.பிரபு, நீடாமங்கலத்தில் எஸ்.நேரு, மன்னார்குடியில் எஸ்.என்.இளராஉள்ளிட்ட பத்து இடங்களில் இந்த உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் திருவாரூரில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் என்.வசந்தன், மாவட்ட செயலாளர் கே.எஜ்.செந்தில், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் மேலும் அடுத்த கட்ட போராட்டமாக வரும் பிப்ரவரி 06- தேதி சென்னை ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் அலுவலகத்தில் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.