பறை இசை வாசித்த இராணிப்பேட்டை கலெக்டர்!

கு.அசோக்,
இராணிப்பேட்டையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பறை இசை அடித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் வளர்மதி.
இராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் தமிழ்நாடு கலை பண்பாட்டு இயக்கம் மற்றும் இயல், இசை நாடகம் மன்றம் சார்பில் முத்தமிழறிஞர் டாகடர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழர் திருநாள் பொங்கல் விழாவை கொண்டாடும் கலைச் சங்கமம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை போற்றும் வகையில் நலிந்த பாரம்பரிய கலையை முன்னேற்றம் அடைய செய்யும் வகையில் பறையாட்டம், கரகாட்டம், நையாண்டி மேளம், கொக்கலிக்கட்டை, புலியாட்டம், வாளி மோட்சம், இசை நாடகம் உள்ளிட்ட பலவேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதனை மாவட்ட ஆட்சியர் வளர்மதி பறை இசையடித்து தொடங்கி வைத்தார்.
குறிப்பாக நாடக கலைஞர்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதில் பல்வேறு வேடங்கள் அணிந்து வந்த கலைஞர்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.