வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் வேலூர் புரட்சியை மறைத்துவிட்டனர்! அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் வேலூர் புரட்சியை மறைத்துவிட்டனர்! அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,

வேலூர் கோட்டை சுற்றுப்பாதையில் உள்ள பெரியார் பூங்காவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75வது சுதந்திர தின விழா சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா (Azadi Ka Amrit Mahotsav)  விடுதலைப் போராட்டத்தில் தமிழக வீரர்களின் பங்கு புகைப்பட கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்க  7 நாட்கள் கண்காட்சியினை மாண்புமிகு நீர்வளத்துறை  அமைச்சர்  திரு.துரைமுருகன்  அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட  ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப.,   அவர்கள்  தலைமை வகித்தார்கள்.

மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.இராமமூர்த்தி அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்.

வேலூர் நாடாளுமன்ற  உறுப்பினர் திரு.து.மு.கதிர் ஆனந்த் அவர்கள், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.கார்த்திகேயன் அவர்கள், மாண்புமிகு வேலூர் மாநகராட்சி மேயர் திருமதி. சுஜாதா  ஆனந்த குமார்  அவர்கள், முன்னிலையுரையாற்றினார்கள். வேலூர் மாநகராட்சி  துணை மேயர் திரு. சுனில் குமார்  அவர்கள்,  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. க.ஆர்த்தி அவர்கள்  வாழ்த்துரையாற்றினார்கள்.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (கூ/பொ) திரு.மு.பரத் குமார் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

வேலூர் கோட்டை சுற்றுப்பாதையில் உள்ள பெரியார் பூங்காவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75 வது சுதந்திர தின விழா சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா  (Azadi Ka Amrit Mahotsav)  விடுதலைப் போராட்டத்தில் தமிழக வீரர்களின் பங்கு புகைப்பட கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்க 7 நாட்கள்  நடைபெறும் கண்காட்சியில் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர்  திரு.துரைமுருகன் அவர்கள் மலர் தூவி மரியாதை செய்து கண்காட்சியை திறந்து வைத்து அரங்குகளை பார்வையிட்டார்கள்.

 இந்நிகழ்ச்சியில்  மாண்புமிகு நீர்வளத்துறை  அமைச்சர்  திரு.துரைமுருகன்  அவர்கள் பேசியதாவது.

இந்தியாவை வெள்ளைக்காரர்கள்  ஆண்டபோது அவர்களைஎதிர்த்து போராட யாருக்கும் தைரியமில்லை. முதன்முதலாக வெள்ளையர்களை எதிர்த்து வேலூர் கோட்டையில் போராடியதால் முதன்முதலாக இந்தியாவினுடைய சுதந்திர கொடி ஏற்றப்பட்டது. ஆனால் வரலாற்றை பாதிபேர் மறுத்து விட்டார்கள். வடநாட்டில் உள்ள வரலாற்று ஆசிரியர்கள்  வேலூர் புரட்சியை கண்டுகொள்வதில்லை. அதற்கு காரணம் அவர்களை புகழ்ந்து விட கூடாது என்ற காரணம் ஆகும். ஆனால் இன்று தமிழக அரசுதான் வேலூர் கோட்டையில் நடைப்பெற்ற போராட்டம் தான் முதல் போராட்டம் என்பதை நாட்டுக்கு அறிவித்து ஏட்டிலே எழுதியிருக்கிறது.

எனவே வேலூர் மகத்தான புகழ் பெற்ற ஒரு ஊர். அதை ஒரு சிறிய கண்காட்சியிலே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  வைத்திருப்பதை பாராட்ட வேண்டும்.  மேலும், அந்தமான் சிறைக்கு சென்ற போது காலமெல்லாம் சிறையில் இறந்தனர் என்ற பட்டியலில் வேலூரிலிருந்து ஒரு தியாகியின் பெயர் இடம்பெற்றிருந்தது கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

ஆகவே தியாகம் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. சுதந்திரப் போராட்டத்தில் செக்கு இழுத்து சித்திரவதைப்பட்ட தியாகிகள் எல்லாம் கண்காட்சியில் படமாக வைக்கப்பட்டிருப்பது சிறப்பாக உள்ளது-  எனவே  இந்த கண்காட்சியானது சிறப்பான கண்காட்சி எனவும், இந்த கண்காட்சியில் இடம் பெற்ற திரு தியாகராஜர் கலைக் குழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்திய கலைஞர்களை பாராட்டி பரிசுகளை வழங்கியும், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளும இந்த கண்காட்சியினை  இன்று முதல் 01.04.2022 வரை கண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை அறிந்து பயனைடையுமாறு  மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

 இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழக வீரர்களின் பங்கு புகைப்பட கண்காட்சி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக  விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற தமிழகம் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த 50 க்கும் மேற்பட்ட விடுதலைப் போராட்ட தியாகிகள், தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி சுற்றுலா துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத் துறை, வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, சமூக நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கைத்தறி மற்றும் கதர் கிராம தொழில் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துறை மூலம்  பிளாஸ்டிக் ஒழிப்பு மாற்று பொருட்கள் குறித்த கண்காட்சி போன்ற பல்துறை பணி விளக்க கண்காட்சி இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்ச்சியில்.,வருவாய் கோட்டாட்சியர் திருமதி.பூங்கொடி, காட்பாடி ஒன்றிய குழு தலைவர் திரு.வேல்முருகன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் பலர்  கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,வேலூர்  மாவட்டம்.