கலைஞர் என்ற தலைப்பில் நூற்றாண்டு விழா! கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு!

கலைஞர் என்ற தலைப்பில் நூற்றாண்டு விழா! கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு!

ம.பா.கெஜராஜ்,

பகுத்தறிவு சீர்திருத்த செம்மல் கலைஞர் என்ற தலைப்பில் வேலூர் மாவட்டத்தில் 25.11.2023 அன்று நடைபெற உள்ள கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது.

  மேலும், விழா நடைபெற உள்ள நகர அரங்கை நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., அவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 இதில், நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் திருமதி மலர்விழி, இ.ஆ.ப.மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.என்.மணிவண்ணன்,இ.கா.ப., நீர்வளத்துறை சிறப்பு செயலாளர் திரு. முருகன்மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி த. மாலதி மற்றும் மேல்பாலாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திரு.ரமேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.