முதல்வரை வரவேற்க தயாராகும் மாவட்ட நிர்வாகம்!

முதல்வரை வரவேற்க தயாராகும் மாவட்ட நிர்வாகம்!

த.நெல்சன்,

நாளை மறுதினம் தமிழக முதலமைச்சர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு வருகைதர உள்ளார்.

  அவரை வரவேற்கும் விதமாக பல்வேறு ஆயத்தப்பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது. அந்த வகையில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல்பாண்டியன் இ.ஆ.ப.அவர்கள் தலைமையில் ஆய்வு நடத்தினார்கள்.

  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி ஆர்த்தி மாநகராட்சி மேயர் திரு.அசோக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.