பள்ளி பேருந்துகளை துருவி துருவி ஆய்வு நடத்திய வேலூர் ஆட்சியர்!

ஜி.கே.சேகரன்,
அனைக்கட்டு மற்றூம் காட்பாடியில் உள்ள பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு செய்தார்.
வேலூர்மாவட்டம், காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி பேருந்துகள் வேன் கள் உள்ளிட்டவைகள் உறுதி தன்மை தரம் மற்றும் அவசர வழிகள் உள்ளதா முதலுதவி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதா தீ தடுப்பு கருவிகள் முறையாக பராமரிக்கபடுகிறதா என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டார்.
இதில் வேலூர் வட்டார போக்குவரத்திற்குட்பட்ட வேலூர் காட்பாடி, அனைக்கட்டு பகுதிகளில் உள்ள 40 பள்ளிகளை சேர்ந்த 386 வாகனங்களும், குடியாத்தம் வட்டார போக்குவரத்திற்குட்பட்ட 32 பள்ளிகளை சேர்ந்த கேவிகுப்பம், குடியாத்தம் பேர்ணாம்பட்டு பகுதிகளை சேர்ந்த 191 பள்ளி வாகனம் என மொத்தம் 577 வாகனங்கள் ஆய்வுபடுத்த திட்டமிடப்பட்டது.
அதில் முதல் நாளில் இன்று 261 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் 23 வாகனங்களில் சிறு குறைபாடுகள் அக்குறைகளை சரி செய்துகொண்டு ஆய்வுக்கு வருமாறு வாகனங்கள் திருப்பி அனுப்பட்டது
பின்னர் தனியார் பள்ளி ஓட்டுநர்களின் மத்தியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் ஓட்டுநர்கள் பொறுமையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் சிறு அளவு அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலும் பெரிய அளவு பாதிப்பு என்பதால் அதனை கவணத்தில் வைத்து ஓட்டுநர்கள் வாகனங்களை ஓட்ட வேண்டும் அசதியில் வாகனங்களை ஓட்ட கூடாது.
கவனகுறைவாக வாகனங்களை ஓட்ட கூடாது செல்போனை பேசி கொண்டு வாகனங்களை ஓட்ட கூடாது தவறான சாலை பாதைகளில் செல்ல கூடாது.
இது போன்று சென்ற வாகனங்களை கண்கானித்தும் பல முறை அபராதம் விதித்துள்ளோம் முறையாக இயக்க முடியாத வாகனங்களை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் அதனை ஏற்றுகொள்ளாமல் அதிகாரிகளை தொந்தரவு செய்வதாக மிரட்டுவது கூடாது.
ஓட்டுநர்கள் வாகனங்களை தினசரி கண்காணிக்க வேண்டும் படிகள் உறுதியுடன் உள்ளதா கதவுகள் மூடுகிறதா என பார்க்க வேண்டும் பள்ளி உரிமையாளர்களும் சரியான முறையில் வாகனத்தை அமைத்துகொடுக்க வேண்டுமென பேசினார்.