வாணியம்பாடி அருகே அக்கா இறந்த அதிர்ச்சியில் தம்பியும் மரணம்!100 பேரக்குழந்தைகள் கண்ணீர்!

டி.இ.முகமது இர்பான்,
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு இவருடைய மனைவி வள்ளியம்மாள் வயது (104 ) இவர் நேற்று இரவு வயது மூப்பின் காரணமாக இறந்து போனார். இந்த நிலையில் அதே ஊரில் வசித்து வரும் இவரது தம்பி துரைசாமி (வயது 102) இவருக்கு இந்த தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கேட்ட அவர் ஒரே இடத்தில் வேதனையில் அமர்ந்திருந்தார், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து அவரும்¢ இறந்தார்.
அக்கா இறந்த அதிர்ச்சியில் தம்பி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இறந்து போன வள்ளியம்மாளின் கணவர் சின்னக்கண்ணு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார், இவர்களுக்கு இரண்டு மகன்களும், நான்கு மகள்களும் உள்ளனர். இவர்கள் மூலம் 43 பேர குழந்தைகள் உள்ளனர்.
அதேபோல் துரைசாமிக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர் இவர்களுக்கு 57 பேரக் குழந்தைகள் உள்ளனர்.
இறந்து போன துரைசாமியின் மகன் முன்னாள் அண்ணாமலை செட்டியப்பனூர் முன்னால் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். இறந்து போன வள்ளியம்மாள் மற்றும் துரைசாமியின் உடல்கள் இன்று மாலை நவ-21 அதே ஊரில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
தாத்தா பாட்டி இறந்த சோகத்தில் உறவினர்களும் 100 பேரக்குழந்தைகளும் கண்ணீர் வடித்தனர்.