திமுக எம்.எல்.ஏ. முன்னிலையில் பாரத் மாதாகி ஜெ! பரபரப்பான மேடை!

திமுக எம்.எல்.ஏ. முன்னிலையில் பாரத் மாதாகி ஜெ! பரபரப்பான மேடை!

 ஜி.கே.சேகரன்,

 திமுக எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் பாரத் மாதாகி ஜெ என்று கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 வேலூரில் 1035 நாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து ஒரேநேரத்தில் உலக சாதனை முயற்சி நமது இந்திய தேசத்தின் சந்திராயன் வெற்றிக்காக இந்த புதிய முயற்சியை மேற்கொண்டனர் 

 வேலூர் மாவட்டம் வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் வேலூர் நாட்டிய கலைஞர்கள் சங்கமம் சார்பில் உலக சாதனை முயற்சியாக 1035 நாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து சுமார் 16 நிமிடங்கள் மூன்று வினாடிகளில் நடனங்கள் ஆடி சாதனை படைத்தனர். இது உலக சாதனை புத்தகத்தில் தற்போது இடம்பெற்றுள்ளது.

 இந்த சாதனையை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.கா.ப. அவர்கள் கலந்து கொண்டு சான்றுகள் வழங்கினார்.

 ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுமதி, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

  அப்போது வித்தியாசமான தேசப்பற்று பாடல்களை அமைத்து நடனம் ஆடினார்கள்.

 ஆட்சியர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயேன் ஆகியோர் பரிசு வழங்கிய போது அவர்கள் முன்னிலையில் பாரத் மாதாகி ஜெ. என்று மைக்கில் ஒருங்கிணைப்பாளர் முழங்கினார். கடுப்பான எம் .எல் .ஏ அந்த நபரை அழைத்து விசாரித்தார்.