நாட்ரம்பள்ளி பெண் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் ? இது தான் காரணமாம்!

டி.இ.முகமது இர்பான்,
திருப்பத்தூர் மாவட்டம், நாட்ரம்பள்ளி காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டரை உடனடியாக அந்த ஸ்டேஷனிலிருந்து ரிலீவ் ஆக சொல்லி ஐ.ஜி அலுவலகத்திலிருந்து இ- மெயில் வந்திருக்கிறது. இதனால் அம்மணி ஆடிபோய்விட்டாராம்.
மேற்படி ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் பெயர் மலர். இவருக்கு கடந்த ஞாயிற்று கிழமையன்று வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது. இந்நிலையில் அவரை தடாலடியாக காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றியிருக்கிறார்கள். அதுவும் ஐ.ஜி. அலுவலக காத்திருப்பு பட்டியலில் அவரை வைத்துள்ளது காவல் துறை.
எதற்காக இந்த திடீர் நடவடிக்கை என்று விசாரித்த போது, அவர் ஸ்டேஷனுக்கு வரும் புகார்களை விசாரிப்பதற்காக வெள்ளக்கல் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் சொகுசு காரில் தான் செல்வாராம். காவல் துறையின் வாகனத்தை பயன்படுத்தாமல் தனியார் வாகனத்தில் யூனிபார்முடன் அமர்ந்துக் கொண்டு பஞ்சாயத்துகளை முடித்துவைப்பாராம்.
அந்த காரின் முதலாளி சொல்கிறபடிதான் ஸ்டேஷன் வேலைகளை அம்மணி கவனித்து வந்தாராம். குறிப்பாக அந்த நபர் சொல்கிறபடிதான் வழக்கு போடுவதா வேண்டாமா என்பதை இன்ஸ்பெக்டர் முடிவெடுப்பாராம். தம் உயர் அதிகாரிகளின் உத்தரவைவிட நண்பரின் வழிகாட்டுதலே முக்கியம் என செயல்பட்டிருக்கிறார்.
குறிப்பாக சூதாட்ட விடுதி தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் புகார் அளித்திருக்கிறார்கள். ஆனால் இந்தம்மா அந்த புகாரை அவரது நண்பரின் உத்தரவுபடி கிழித்து போட்டுவிட்டாராம். நேற்று (திங்கள் கிழமைகூட) வந்த ஒரு புகாரை கூட அதே போல் அடக்கி வாசித்திருக்கிறார். இது தொடர்பாக உயர் போலி அதிகாரிகளுக்கு புகார்கள் பறந்தபடி இருந்ததாம்.
இந்த புகார்களுடன் சொகுசு காரினுடைய முதலாளியின் மனைவி உயர் போலிஸ் அதிகாரிகளுக்கு இவர்களின் நட்பைக்குறித்து புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு உளவுத்துறை ஷேடோ போட்டு கண்காணிக்க ஆரம்பித்தனர். அதில் இன்ஸ்பெக்டர் அம்மணி மீது தொடர்பாக வந்த விஷயங்கள் உண்மையென கண்டுபிடிக்கப்பட்டதாம். அதன் பேரிலேயே உயர் காவல் அதிகாரிகள் அந்த பெண் இன்ஸ்பெக்டரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றியிருக்கிறார்கள்.
மேற்படி நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் எழுத்தர் ஆக ஒரு பெண் எஸ் எஸ் ஐ உள்ளார் அவருக்கு இந்த ஸ்டேஷன் டூட்டி கிடையாது. வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தை சேர்ந்த அவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாட்றம்பள்ளி ஸ்டேஷன் ரைட்டர் ஆக உள்ளார்.
கேட்டால் எனக்கு உடம்பு சரியில்லை, டிஎஸ்பிஐ தெரியும் என்று சும்மாவே சொல்லிக்கொண்டு அங்கு வரும் இன்ஸ்பெக்டர்களுக்கு சொம்பு தூக்கி வேலை பார்த்து இருக்கையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
இப்படி எல்லாம் சாக்கு போக்கு சொல்லி ஆண்டு கணக்கில் ஸ்டேஷனில் இருந்து கொண்டு கல்லாகட்டி வருகிறாராம்.
ஆபீஸ் டைம் போல் பத்து மணிக்கு ஸ்டேஷனுக்கு வரும் அவர், மதியம் ஒரு மணிக்கு சாப்பாட்டுக்கு சென்று விட்டு பின்னர் நான்கு மணிக்கு தான் ஸ்டேஷனுக்கு திரும்புவாரம்.
ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக ஓ.டியில் இருக்கும் இவர் சமூக விரோதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு ஸ்டேஷனுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல ஸ்டேஷன்களில் ஓ.டி என்கின்ற பெயரில் ஆண்டு கணக்கில் இப்படி அட்டூழியம் செய்து கொண்டிருப்பவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். அவர்கள்மீது உயர் காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.