ஊராட்சி தலைவர்களின் பதவிகள் ஏலம் விடப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்! ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்!!

கு.அசோகன்,
வேலூர் மாவட்டத்தில் 2350 பதவிகளுக்கு இன்று முதல் வேட்பு மனுக்க தாக்கல் செய்யலாம், மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கபடும் - ஊராட்சி தலைவர்களின் பதவிகள் ஏலம் விடப்பட்டால் கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேலூரில் பேட்டி.
வேலூர்மாவட்டம்,வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் ஊரக உள்ளாட்சித்தேர்தலுக்கான வரைவு வாக்குசாவடி மையப்பட்டியலினை வெளியிட்டார்.
இதனை அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுகொண்டனர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டமும் நடந்தது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்கள் ஒரு மாவட்ட ஊராட்சி 247 கிராம ஊராட்சிகளுக்கு இன்று முதல் வேட்புமனுக்கள் துவங்குகிறது.
மொத்தம் 14 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 138 ஊராட்சி ஒன்றிய குடியுரிமை திருத்தச் சட்டம், எட்டு வழி சுங்கச்சாலை, கூடங்குளம் அணுவுலை, நியூட்ரினோ, வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டோர் மீது பதியப்பட்ட 5570 வழக்குகளை திரும்பப் பெற்றதற்கான அரசாணையை வெளியிட்டது.
138 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் 247 ஊராட்சி தலைவர்கள் 2071 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கவுள்ளது இதில் 1331 வாக்குசாவடி மையங்களில் வாக்குபதிவானது நடைபெறும் இதில் இம்மாவட்டத்தில் 252 வாக்குசாவடிகள் பதட்டம் நிறைந்தவைகளாக கண்டறியப்பட்டுள்ளது.
வாக்குசாவடிகள் போதுமான அளவு உள்ளது கூட்ட தேவையில்லை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க மாலை 5-6 மணிவரையில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரக உள்ளாட்சித்தேர்தல்களில் தேர்தல் பணியில் 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் பணியாளர்கள் வரையில் ஈடுபடுத்தபடுவார்கள் மேலும் திருவண்ணாமலை மாவட்ட எல்லை பகுதிகளிலும் ஆந்திர எல்லைபகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படும்.
திருமண மண்டபங்களும் கண்காணிக்கபடும், பரிசு பொருட்களை தடுக்க தனி பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி தலைவர் பதவிகள் ஏலம் விடுவது தடை செய்யப்பட்டுள்ளது அதனை மீறி நடைபெற்றால் அவர்களி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறினார். பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.