திமிரியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளை- மர்மநபர்கள் கைவரிசை

திமிரியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளை- மர்மநபர்கள் கைவரிசை

G.K.Sekaran,

இராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த சஞ்சீவிராயன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன். தணியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்தாருடன் கலவையில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு  காலை மீண்டும் வீட்டுக்கு திரும்பி உள்ளார்.

அப்போது  வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு  இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதேபோல சஞ்சீவிராயன் பேட்டை பகுதியில் உள்ள வெங்கடேசன்  மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோர் வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

 இந்த கொள்ளை சம்பவத்தில் 15 சவரணுக்கும் மேற்பட்ட தங்க நகை மற்றும் பணம், பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டுப்புடவைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

 இந்நிலையில் இக் கொள்ளை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த  திமிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே பகுதியில் 3 க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூரில் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் வணிகவரித்துறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக என சோதனை

  வேலூர்மாவட்டம்,வேலூர் காகிதப்பட்டறை  பகுதியில் உள்ள  சென்னை சில்க்ஸ்  நிறுவனத்துக்குச் சொந்தமான   ஜவுளி மற்றும் நகைகடையில் இன்று வணிகவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்  கடையில் விற்பனையான பொருட்கள் துணிகள் மற்றும் நகைகள் அவற்றின் வரவு செலவு கணக்குகள் அவைகளுக்கான ரசீது மற்றும் அரசுக்கு செலுத்திய வரிகளின் பில்கள் முறையாக உள்ளதா எனவும் தொடர்ந்து வணிகவரித்துறையின் சோதனை நடந்து வருகிறது.