அதிமுக பிரமுகர் வைத்த பேனர் சரிந்து பெண் காயம்!

அதிமுக பிரமுகர் வைத்த பேனர் சரிந்து பெண் காயம்!

ச.பாண்டி,

 திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே அதிமுக பிரமுகர் பாபு இல்ல திருமண விழாவிற்கு பேனர்கள் பல வைக்கப்பட்டன.

 இந்நிலையில்,அவ்வழியே  டூ வீலரின் சென்ற பெண்ணின் மீது பேனர் விழுந்ததில் அவர் பலத்த படுகாயமடைந்து போளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 இந்த சம்பவம் போளூர் அருகே மொடையூர் கிராமத்தில் நடந்தது.

 உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஒன்றிய அவைத்தலைவர் பாபுவின் மகள் அனிதப்பிரியாக்கும்  பார்த்திபன் என்கின்ற மணமகனுக்கும் இன்று திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமண விழாவிற்கு போளூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொள்கிறார்.  

 ஆகவே, அவரை வரவேற்பதற்காக தேவிகாபுரம் போளூர் நெடுஞ்சாலையில் விளம்பர பதாகை மற்றும் அதிமுக கொடிகள் கட்டி பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

 அப்படியிருக்க, தேவிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கந்தவேலின் மனைவி ரம்யா(29) என்பவர் தேவிகாபுரத்தில் இருந்து போளூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

 அப்போது அவர் மீது திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர், விழுந்து விபத்து ஏற்பட்டது.

  இதில் ரம்யா பலத்த காயமடைந்தார். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து போலிசார் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.