உண்டி பணத்தை லவட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுங்க சாமி!

உண்டி பணத்தை லவட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுங்க சாமி!

ஜி.சாந்தகுமார்,

  உண்டியலில் நம்பிக்கையுடன் அளித்த பணத்தை கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரியும், பணத்தை திரும்ப பெற்று தரவேண்டியும் எட்வின் எலியாஸ் என்பவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்திருக்கிறார்.

அந்த புகாரின் விவரம் வருமாறு,

 வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரிலுள்ள சி.எஸ்.ஐ.நல்லமேய்ப்பர் ஆலயத்தில் நான் உறுப்பினராக உள்ளேன். ஆலயத்தின் குருசேகர தலைவர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை நம்பித்தான் ஆண்டவருக்காக காணிக்கை அளிக்கிறோம். அவ்வாறு நம்பி காணிக்கையிட்ட பணத்தை எங்கள் ஆலயத்தின் முன்னாள் செயலாளர் திரு.சுதாசந்திரன் மற்றும் பொருளாளராக இருந்த திரு.ஜோன்ஸ் ஆனந்தகுமார் ஆகியோர் இருவரும் செயல்பட்டு கையாடல் செய்திருக்கிறார்கள்.

  குடியாத்தம் பாலாற்றின் கரையில் கல்லரை தோட்டத்துக்காக நிலம் வாங்குவதாக கூறி ரூ.2,50,000/த்தை ஆலய வங்கி கணக்கிலிருந்து எடுத்துள்ளனர்.

   அவ்வாறு கல்லரை தோட்டம் அமைக்க உள்ளதாக தேர்வு செய்யப்பட்ட இடமானது நீர்பிடிப்பு கொண்ட இடமாகும், ஏற்கனவே அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் வேறு இடத்துக்கு மாற்றி ஆக்கிரமிப்பை அகற்றியிருக்கிறார்கள்.

 அரசு தடைவிதித்துள்ள அந்த இடத்துக்காக ரூ.2,50,000/- கொடுத்ததாக செயலாளர் திரு.சுதாசந்திரன் மற்றும் பொருளாளராக இருந்த திரு.ஜோன்ஸ் ஆனந்தகுமார் ஆகியோர் பணத்தை கையாடல் செய்திருக்கிறார்கள். பணம் கையாடல் செய்திருப்பது குறித்து, கடந்த 03.07.2022 ஆம் தேதி எங்கள் ஆலயத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நானும், திருச்சபையினர் சிலரும் கேள்வி எழுப்பினோம். நாங்கள் நம்பி அளித்த காணிக்கை பணத்தை நீங்கள் இருவரும் சேர்ந்து கையாடல் செய்துள்ளீர்கள், அந்த பணத்தை மீண்டும் ஆலயத்தின் வங்கிக்கணக்கில்  செலுத்துங்கள் என்று கேட்டோம். அதற்கு அப்போது செயலாளர் பதயிலிருந்த சுதாசந்திரன் மற்றும் பொருளாளர் ஜோன்ஸ் ஆகியோர் உரிய பதில் சொல்லவில்லை.

  எனவே சட்ட நடவடிக்கை கோரி இந்த புகாரை அளிக்கிறேன்.

   அய்யா அவர்கள் ஆலயத்துக்காக நாங்கள் நம்பி செலுத்திய காணிக்கை பணத்தை கையாடல் செய்த சுதாசந்திரன் மற்றும் ஜோன்ஸ் ஆனந்தகுமார் ஆகியோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, ஆலய பொது பணத்தை அவர்களிடமிருந்து திரும்ப பெற்றுக் கொடுக்குமாறு  கேட்டுக் கொள்கிறேன்.