வாணியம்பாடி வசீம் அக்ரம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்!இம்தியாசின் சகோதரியை போலிஸ் அழைத்துச் சென்றதால் பரபரப்பு!

வாணியம்பாடி வசீம் அக்ரம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்!இம்தியாசின் சகோதரியை போலிஸ் அழைத்துச் சென்றதால் பரபரப்பு!

இம்மி,

  வாணியம்பாடி  வசீம் அக்ரம் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான இம்தியாஸின் சகோதரியை போலிஸ் அழைத்துச் சென்றதால் பரபரப்பு உண்டானது.

 மேலும் இம்தியாஸ் சகோதரி  வீட்டில் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

  திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கடந்த 10 ஆம் தேதி  மனித நேய ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்ட வழக்கில் வேலூர் சரக டிஐஜி பாபு தலைமையில் தனிப்படை அமைத்து இந்த வழக்கில்  8 பேர் காவல்துறையால்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் கடந்த 15 ஆம் தேதி  முக்கிய குற்றவாளியாக கருதப்படும் டீல் இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்திலும், கூட்டாளிகள் 6 பேர் தஞ்சை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

அப்படியிருக்க முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட டீல் இம்தியாஸ் உட்பட 7 பேரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வாணியம்பாடி குற்றவியல் நீதித்துறை நடுவரிடம்  வாணியம்பாடி நகர காவல்துறை சார்பில்   மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் 7 பேரை  3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

 இந்நிலையில், தற்போது விசாரணை நடைபெற்று வரும்  நிலையில், திடீர் திருப்பமாக  முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ்

சகோதரி பர்வீன் வீட்டில்  பெண் ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையில் 5 பெண் காவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் தொடந்து 1 மணி நேரம் சோதனை நடத்தினர்.

 ஒரு மணி நேர சோதனைக்கு பின் இம்தியாஸ் சகோதரி பர்வீனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினர் தீவிர விசாரானை மேற்கொண்டு வருகின்றனர்.