தமிழக அரசு பெட்ரோல் வரியை குறைக்கனும்! பாஜகவின் மாட்டுவண்டி ஆர்பாட்டம்!

கு.அசோக்
வேலூரில் பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக அரசு பெட் ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க கோரி மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் போலீசார் குவிப்பு பதட்டம்
வேலூர்மாவட்டம்,வேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியின் சார்பில் அதன் மாவட்டத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் மற்றும் பாஸ்கர் உள்ளிட்டோர் மத்திய அரசு பெட் ரோல்,டீசல் விலையை குறைத்துள்ளது ஆனால் மாநில அரசு பெட் ரோல் டீசல் விலையை குறைக்க மறுக்கிறது எனவே மாநில அரசை கண்டித்து 10 மாட்டு வண்டிகளில் பேரணி செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இதனால் போலீசார் குவிக்கப்பட்டு மாட்டு வண்டிகளை ஆங்காங்கே மடக்கி பிடித்தனர்.
இருப்பினும் ஒரு மாட்டு வண்டி மட்டும் கிரீன் சர்கிள் அருகில் தப்பி வந்த நிலையில் அதில் ஏறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில அரசு உடனடியாக பெட் ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டுமென கோரி மாநில அரசைக்கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள் இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.
படங்கள்:-து.விக்டர்,