காவல் அலுவலகத்தில் அரசியல் சாசன உறுதிமொழி!

காவல் அலுவலகத்தில் அரசியல் சாசன உறுதிமொழி!

   கே.ஏ.ஜெகதீஷ்வரி,

    தென்காசி மாவட்டம், நவம்பர் 26 ஆம் நாளான இன்று இந்திய அரசியல் சாசன தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் வரைக்குழுவின் தலைவராக செயல்பட்ட டாக்டர். அம்பேத்கார் அவர்களை கவுரவிக்கும் விதமாகவும், நினைவு கூறும் வகையிலும் மற்றும் இந்திய அரசியல் மீட்புக்காக அயராது உழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாக இந்திய அரசியல் சாசன தினம் துவங்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

  இந்திய அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கலிவரதன் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

  குடிமக்கள் அனைவரும் சமுதாயம், பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு இவற்றின் தன்னுரிமை, சமுதாயப்படி நிலை,வாய்ப்பு நலம் இவற்றின் சமன் மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும்,அவர்கள் அனைவரிடையேயும் தனி மனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன் பிறப்பு உரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையராய் நம்முடைய அரசியலமைப்பு பேரவையில் 1949 டிசம்பர் 26 நாளாகிய இன்று ஈங்கிதனால், இந்த அரசியல் அமைப்பினை   ஏற்று, ஏற்றி, நமக்கு நாமே வழங்கி கொள்கிறோம்.  மேலும் திருச்சியில் ஆடு திருடர்களை பிடிக்கும் முயற்சியில் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் தெய்வத் திரு. பூமிநாதன் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.