ரவுண்டப்பில் வேலூர் ஆட்சியர்!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.அவர்கள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று கலெக்டர் அலுவலகம் எதிரில் கட்டப்பட்டு வரும் சமையல் கூடத்தை ஆய்வு செய்தார்.அதே போல் காட்பாடி வட்டம் ஆரி மோட்டூர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் மக்களை சந்தித்து அவர்களுக்கு பல உதவிகளை வழங்கியதோடு, அம்மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர் தொரப்பாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிட் 19 தடுப்பூசி போடும் மையத்தை துவக்கிவைத்தார்.
அப்போது வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, சுகாதார பணிகள் இயக்குநர் மரு.பானு, உள்ளாட்சி அமைப்பினர் ஆகியோர் உடனிருந்தனர்.