'உங்களைத் தேடி உங்கள் ஊரில்" உற்சாகமாக ஆய்வு நடத்திய ஆட்சியர்!

ம.பா.கெஜராஜ்,
முதலமைச்சர் அறிவித்த உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., (21.02.2024) அன்று இரவு 7.45 மணி அளவில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள நுழைவுச்சீடு வழங்கும் பிரிவு, புறநோயாளிகள் பிரவு, டையாலிஷிஸ் பிரிவு, பிரசவ பதிவேடு, பெண்கள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவரும் நோயாளிகளின் உறவினர்களிடம் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது குறித்தும், அவர்களுக்கு வழங்கக்கூடிய உணவின் தரத்தினையும் கேட்டபொழுது, அவர்கள் சிகிச்சை மற்றும் உணவும் நன்றாக அளித்து வருவதாக தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக ஆய்வின்பொது வெங்கடசமுத்திரம் ஊராட்சி சுற்றுவட்டார கிராமங்களில் தெருவிளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பதையும் பல்வேறு கிராமங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, சில பகுதிகளில் எரியாத தெரு விளக்குகளை கண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஏன் தெருவிளக்குகள் எரியவில்லை என்று கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக சரிப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மேலும் இதுபோன்று குறைப்பாடுகள் இல்லாவண்ணம் கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
(22.02.2024) இன்று காலை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் வடப்புதுப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்குவதற்காக தயார்செய்யப்பட்ட உணவின் தரத்தினை ஆட்சித்தலைவர் சுவைத்து ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுக்கு அரசு அறிவித்துள்ளபடி உணவு அட்டவணையின்படி வழங்கப்படுகிறதா என்பதை மாணவர்களிடம் நேரடியாக கேட்டறிந்து, பள்ளி குழந்தைகளுக்கு தயார் செய்யப்பட்ட உணவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தினார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாணவர்களிடம் இன்று வழங்கப்படும் உணவு சுவையின்பால் நாள்தோறும் வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார்.
ஆம்பூர் வட்டம் மிட்டாளம் ஊராட்சியில் பொதுமக்கள் வழங்கிய மனுக்களில் ஆராய்ந்த போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் - பேர்ணாம்பட்டு பிரதான சாலையோரங்களில் அதிக மண்துகள்களான தூசி பரவுவதாகவும் இதன் வாயிலாக விபத்துக்கள் ஏற்படுகிறது, ஆகவே இந்த சாலையை தூய்மை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதனடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இந்த சாலையை உடனடியாக தூய்மை செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு உத்தரவிட்டார். அதன்படி இன்று ஆம்பு+ர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஆம்பூர் - பேர்ணாம்பட்டு சாலையில் தூய்மை செய்யும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சம்மந்தப்பட்ட துறை அலுவலருக்கு இந்த சாலையை தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆய்வுகளின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர்.உமா மகேஸ்வரி, மகளிர் திட்ட அலுவலர் திருமதி.பிரியா, பள்ளி ஆசிரியர்கள், தூய்மை பணியார்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.