திமுகவில் யாருக்கெல்லாம் எம்.பி. சீட் கிடையாது?

திமுகவில்  யாருக்கெல்லாம் எம்.பி. சீட் கிடையாது?

 ம.பா.கெஜராஜ்,

  நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. அரசியல் கட்சிகள் அதை எதிர் நோக்கி தற்போதே கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் 39 இடங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்து. இதனால் அக்கசியில் போட்டியிட பலரும் துண்டு போட்டு வருகிறார்கள்.

 அப்படியிருக்க, சிட்டிங் எம்.பி.க்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு எப்படி உள்ளது? சிட்டிங் எம்.பிக்கள் இல்லாமல் தொகுதியில் வேறு யாருக்கு செல்வாக்குலிருக்கிறது? என திமுக தலைமை ரகசிய சர்வே நடத்தியதாம், அதன் அடிப்படையிலேயே சீட்டு வழங்கப்படும் என்று பேச்சு அடிபடுகிறது.

 அந்த வகையில்,  ஸ்ரீபெரும்புதூரில் மீண்டும் டி.ஆர்.பாலுவுக்கே வாய்ப்பளிக்கப்படுமாம், ஆ.ராசா சிட்டிங் தொகுதியான நீலகி£யை தவிர்த்து விட்டு  வேறு தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்டது. ஆனால் நீலகிரி தொகுதியை குறி  வைத்து வேலை பார்த்த பாஜகவின் எல்.முருகன் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாகவுள்ளதால் ராசா  மீண்டும் நீலகிரியில் களம் இறக்கிவிடப்படுவார்.

  திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரை மீது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறதாம். ஆகவே அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பனுக்கு இந்த சீட்டு உண்டாம்.

  வேலூர் தொகுதியில் சிட்டிங் எம்பியான அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மீது தொகுதி மக்களுக்கும் சரி, உடன் பிறப்புகளுக்கும் சரி அவ்வலவாக திருப்தியில்லையாம். எனவே இங்கு பாஜக சார்பில் போட்டியிடும் சண்முகம், கதிர் ஆனந்துக்கு சீட்டு கொடுத்தால், தாம் ஈஸியாக வெல்லலாம் என்று திட்டமிட்டு பணிகளை செய்து வருகிறாராம்.   

  நெல்லை தொகுதியில் ஞானதிரவியத்துக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட மாட்டது.  பூங்கோதை ஆலடி அருணா அல்லது கிராகம்பெல் ஆகிய இருவரில் ஒருவருக்கு சீட் வழங்கப்படலாம் என்கிறார்கள். இதில் பூங்கோதைக்கு அதிக வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள். ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பெற்றிருக்கும் பூங்கோதை அமைச்சராக இருந்தபோதும்இ எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் தொகுதிக்கு நிறைய பணிகளை செய்திருக்கிறார்.

   கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போடியிட்டு உள்ளடி வேலைகளால் தோல்வியைத் தழுவினார். இது மேலிடத்துக்கும் தெரியும். அவர் வெற்றி பெற்றிருந்தால் அமைச்சர் ஆகியிருப்பார் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. ஆக பூங்கோதைக்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.

   தூத்துக்குடி தொகுதியில் கனிமொழிக்கே மீண்டும் வாய்ப்பளிக்கப்படும். தூத்துக்குடியை குறி வைத்தே அவர் பல்வேறு பணிகளை செய்தும் வருகிறார். பெரும்பாலும் தொகுதியிலேயேதான் அவர் இருக்கிறார் என்கிறார்கள். அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் அவர் வெற்றி பெறுவார்.

  தேனி தொகுதியை பொறுத்தவரை கடந்த முறை கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியது. ஆனால்  அந்த தொகுதியில் மட்டுமே திமுக கூட்டணி தோல்வியை தழுவியது. எனவே இந்த முறை தேனியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என கட்சியினர் கோரியுள்ளனர். அப்படி ஒதுக்கும் பட்சத்தில் தங்க தமிழ்ச்செல்வன் அல்லது பொன்.முத்துராமலிங்கத்துக்கு வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

  பெரம்பலூர் தொகுதியை கடந்த முறை ஐஜேகே கட்சியின் தலைவர் பச்சைமுத்துவுக்கு திமுக ஒதுக்கியது. ஆனால் அவர் இப்போது பாஜக கூட்டணியில் உள்ளார்.  எனவே திமுகதான் அந்த தொகுதியில் போட்டியிடும் என்கிற நிலையில், இந்த தொகுதியை அமைச்சர் கே.என்.நேரு தனது மகன் அருணுக்காக கேட்டு வருகிறார்.    

  திருநாவுக்கரசருக்கு இல்லையென்றாலும் கூட திருச்சி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பதால் பெரம்பலூர் தொகுதியை தனது மகனுக்காக அவர் கேட்டு வருவதாக கூறப்பகிறது. ஒருவேளை ஆ.ராசா மீண்டும் பெரம்பலூர் தொகுதியை கேட்டால் கொஞ்சம் சிக்கல் தான்.

 கள்ளக்குறுச்சியில் மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமனுக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. இவருக்கு முதலில் வாய்ப்பு மறுக்கப்படும் என கூறப்பட்டது.

 தர்மபுரி தொகுதி எம்பி செந்தில்குமாருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கக் கூடாது என தலைமைக்கு பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் திமுகவின் கொள்கைகளை களத்தில் தீவிரமாக பேசுபவர் என்பதால் அவரது பெயர் சந்தேகப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.

 வடசென்னை கலாநிதி வீராசாமி, தென் சென்னை தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் மீதும் அதிருப்தி  நிலவுவதாக திமுக தலைமைக்கு ரிப்போர்ட் போயுள்ளது.  கட்சித் தலைமை என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது பிறகு தான் தெரியும்.   

 தென் சென்னையை கூட்டணி தொகுதிக்கு ஒதுக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

 திமுக வேட்பாளர் தேர்வில் உதயநிதியின் சார்பில் குறைந்தபட்சம் 5 சீட்டுகளையாவது வளைப்பார்களாம்.