கொட்டும் பனியில் மாரத்தான் ஓட்டம்! அமைச்சர் துவக்கினார்!

கொட்டும் பனியில் மாரத்தான் ஓட்டம்! அமைச்சர் துவக்கினார்!

 ஜி.கே.சேகரன்,

 கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டியினை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

 இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்பட்டது.

 இதில் கொட்டும் பணியையும் பொருட்படுத்தாமல் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

 இந்த போட்டியில் 5,8,10 என கிலோமீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டது.

 மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தய நிகழ்ச்சிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 5,000 3,000 2,000 என முதல் மூன்று பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர்.

வேலூர்

 அதே போல், காட்பாடியில் உடற் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மாராத்தான் ஓட்டம் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.

 வேலூர்மாவட்டம்,காட்பாடி பிரம்மபுரம் தனியார் பள்ளி அருகிலிருந்து  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

  இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி கொடியசைத்து துவங்கி வைத்தார்.

  போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் , பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு ஓடினார்கள் இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.