சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற ராணிப்பேட்டை!

சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற ராணிப்பேட்டை!

கு.அசோக்,

 5 மாவட்டங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் மாணவர்கள் பங்கேற்ற கராத்தே போட்டி சோளிங்கரில்  நடைபெற்றது.

 ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் சித்தூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஸ்ரீ காஞ்சி போதிதர்மர் ஸ்போர்ட்ஸ்  ஷிட்டோ ரியூ கராத்தே  அசோசியேசன் ஆப் இந்தியா பள்ளி சார்பில் கராத்தே  போட்டி நடைபெற்றது.

 இதில் ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சித்தூர், வேலூர் ஆகிய  மாவட்டங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட கராத்தே மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

 இந்த போட்டியில் வயது மற்றும்  எடை பிரிவுகளின் அடிப்படையில் மாணவர்கள் போட்டியிட்டனர். போட்டியில் வெற்றி பெற்ற கராத்தே மாணவ மாணவிகளுக்கு கராத்தே பள்ளி தலைவர் கராத்தே ராஜன், தேசிய சிலம்பாட்ட தலைவர் சந்தோஷ் குமார் ஆகியோர் சான்றிதழ் கோப்பை வழங்கினார்கள்.

 அப்போது கராத்தே மாஸ்டர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் ராணிப்பேட்டை மாவட்டம் வென்றது.