குளுகுளு விளையாட்டு மைதானம் திறப்பு!

குளுகுளு விளையாட்டு மைதானம் திறப்பு!

கே.ஏ.ஜெகதீஸ்வரி
ராஜபாளையத்தில் முதன் முறையாக செயற்கை புல்வெளிகளுடன் கூடிய தனியார் விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மலையடிப்பட்டியில் செயல்படும் அரசு போக்குவரத்து கழக பணி மனை அருகே முதன் முறையாக தனியார் சார்பில் விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டுள்ளது.

 முழுவதும் செயற்கை புல்வெளிகள், மைதானத்தின் மேற்புறம் உள்ளிட்ட 5 பக்கங்களும் வலையால் மூடப்பட்டு, மின்னொளி வசதியுடன் இந்த மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.

7 பேர் கலந்து கொள்ளும் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடும் வகையில் அளவீடு செய்து இந்த மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.

 மேலும் பயிற்சியாளர் மூலம் யோகா, கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு பயிற்சி நடைபெற உள்ளது.

இந்த மைதானத்தை ஊராட்சி சேர்மன் சிங்கராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

பின்னர் துணை சேர்மன் துரை கற்பகராஜிடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். பின்னர் நகராட்சி பெண் சேர்மன் பவித்ராஷ்யாமும் பேட்டிங், பௌலிங் செய்து மகிழ்ந்தார்.

இதனை தொடர்ந்து சிறுவர்கள் அணியின் சார்பில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது