அடியெடுத்து வைத்த அர்ஜென்டினா! குப்புற விழுந்த சவுதி!

அடியெடுத்து வைத்த அர்ஜென்டினா! குப்புற விழுந்த சவுதி!

 ம.பா.கெஜராஜ்,

  உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்துவருகின்ற நிலையில் லீக் முதல் சுற்று ஆட்டத்தில் சவுதி அரேபியா டீமிடம் உலக ஜாம்பாவன் அர்ஜென்டினா 2 கோல் வாங்கி மண்ணை கவ்வியது.

கால்பந்து ரசிகர்களை இது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 இந்நிலையில் நேற்று நடந்த இரண்டாவது சுற்றில் சவுதி அரேபியா போலாந்துடன் மோதி குப்புற விழுந்தது. சவுதியின் பல ஷாட்டுகள் மிஸ் ஆனது. அதே போல் போலாந்தின் ஷாட்டுகளும் மிஸ்ஸாகின. அவையாவும் கோல்களாக மாறியிருந்தால் வியக்கும் பல காட்சிகள் கால் பந்தாட்ட ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும்.  

 அதேபோல் அர்ஜென்டினா அணி மெக்சிகோவை எதிர்கொண்டது. லுசைல் ஐகானிக் மைதானத்தில் நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டிய போதும், முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியின் 64 வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி கோல் அடித்து அந்நாட்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.

   தொடர்ந்து 87வது நிமிடத்தில் வீரர் பெர்னான்டஸ் மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட போதும் மெக்சிகோ அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை அர்ஜென்டினா பதிவு செய்தது.

 அதாவது முயல் ஆமை கதையாக சவுதி அர்ஜென்டினா டீம்கள் ஆனது.