சிலம்பத்தில் தங்கம் வென்றவரை கிராம மக்கள் வரவேற்றனர்! டி.எஸ்.பி.செய்த மரியாதை-அதிகாரிகள்?!

சிலம்பத்தில் தங்கம் வென்றவரை கிராம மக்கள் வரவேற்றனர்! டி.எஸ்.பி.செய்த மரியாதை-அதிகாரிகள்?!

ஜி.கே.சேகரன்,

  இந்தியா நேபால் நாடுகளுக்கிடையே நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கம் வென்று ஊர் திரும்பிய வாணியம்பாடி வீரருக்கு சிலம்பாட்டத்துடன் கிராம மக்கள் பிரம்மாண்ட வரவேற்பு  அளித்தனர்.

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமூத்திரம் பகுதியை சேர்ந்த வாட்ச்மேன் இளங்கோ என்பவரின் மகன் கார்த்திக்(25). இவர் சிறு வயதில் இருந்தே சிலம்பம் போட்டியில் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

   இந்நிலையில் இந்தியா நேபால் நாடுகளுக்கிடையே கடந்த 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நேபாள நாட்டில் நடந்த சிலம்பு போட்டியில் பங்கேற்க கார்திக்கு வாய்ப்பு கிடைத்து.

  இதில்  நேபால் நாட்டு சார்பில் 3 பேரும் இந்தியா சார்பில் 3 பேரும் கலந்து கொண்டு போட்டியிட்டதில் வாணியம்பாடி வீரர் கார்த்திக் முதல் பரிசாக தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

   இந்நிலையில் இன்று அவர் சொந்த ஊர்  வாணியம்பாடிக்கு வருகை தந்த போது அவருக்கு பேருந்து நிலையத்தில் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து  மேல தாளத்துடன் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

  மேலும்  சிலம்பம் சுற்றுவதில் பயிற்சி பெற்று வரும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் சிலம்பம் சுத்தி இவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  தங்கம் வென்ற கார்த்திக்கின் சொந்த ஊர் வருகை குறித்து அறிந்த அரசு அலுவலகர்கள் ஒருத்தர் கூட அவரை வரவேற்க வரவில்லை. சின்ன அதிகாரிகளுக்கே வேலை பளு என்றால் மாவட்ட ஆட்சியருக்கு சொல்லவே தேவையில்லை.

விதிவிலக்காக டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் வீரருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  அது சரி கார்த்தி என்ன அமைச்சர் ஊட்டு புள்ளையா அல்லது உயர் சாதிக்காரரா?...விடுங்க சாமி.