சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நூறாண்டு மாராத்தான் ஓட்டம்!

ஜி.கே.சேகரன்.
வேலூர்மாவட்டம்,வேலூரில் கோட்டை காந்தி சிலை அருகிலிருந்து சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை துவங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவை ஒட்டி அதன் துறையின் சார்பில் மாராத்தான் ஓட்டமானது நடைபெற்றது.
இந்த ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார் வேலூர் காந்தி சிலையில் புறப்பட்ட இந்த மாராத்தான் ஓட்டம் அண்ணாசாலையின் வழியாக சென்று நேதாஜி விளையாட்டரங்கை அடைந்தது.
இதில் திரளானோர் கலந்துகொண்டு ஓடினார்கள் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பானுமதி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.