நீதிமன்றத்தில் இ-பையிலிங் வேண்டாமாம்!

நீதிமன்றத்தில் இ-பையிலிங் வேண்டாமாம்!

  கே.ஏஜெகதீஸ்வரி,

 இ பைலிங் முறையை ரத்து செய்யக் கோரி இராஜபாளையத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இ பைலிங் முறையால் வழக்கறிஞர்கள் மற்றும் எழுத்தர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.

   விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே பெண்கள் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் மற்றும் எழுத்தர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கும் இ பைலிங் முறையை கண்டித்தும், இ பைலிங் முறையால் ஏற்படும் நடைமுறை சிக்கல்களால் பொது மக்கள் பாதிப்பு அடையும் வாய்ப்புகள் இருப்பதால் இதனை திரும்ப பெற வலியுறுத்தியும், கேரள மாநிலத்தை போல தமிழகத்திலும் இந்த முறையை தடை செய்யக் கோரியும் வழக்கறிஞர்கள் முழக்கமிட்டனர்.