சிறை நிர்வாகத்திலும் தொழில் நுட்பம் கற்க வேண்டும்! இணை இயக்குநார் பேச்சு!

சிறை நிர்வாகத்திலும் தொழில் நுட்பம் கற்க வேண்டும்! இணை இயக்குநார் பேச்சு!

 கு.அசோக்,

தொழில்நுட்பங்கள் இல்லாமல் எதுவும் இயங்குவது கிடையாது, அதே போல் சிறைத்துறை அதிகாரிகளும் அதிநவீன தொழில் நுட்பங்களை அறிந்திருக்க வேண்டும் - சிறை மற்றும் சீர் திருத்த நிர்வாக பயிலகம் மற்றும் மத்திய காவல் ஆய்வகம் சார்பில் நடக்கும் ஐந்து நாள் பயிற்சியை துவங்கி வைத்து சிறை சீர் திருத்த நிர்வாக பயிலகத்தின் இணை இயக்குநர் பாஸ்கர் பேச்சு.

 வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் சிறைத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் சிறை மற்றும் சீர் திருத்த நிர்வாக பயிலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது சிறை சீர்திருத்த நிர்வாக பயிலகம் மற்றும் டெல்லி காவல் ஆய்வகம் இணைந்து தமிழ்நாடு,ஆந்திரா கர்நாடக கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு சிறைகளில் தொழில்நுட்ப நிர்வாக மேலாண்மை குறித்த ஐந்து நாட்கள் பயிற்சி இன்று துவங்கியது.

 இதனை சிறை மற்றும் சீர் திருத்த நிர்வாக பயிலகத்தின் இணை இயக்குநர் பாஸ்கர் துவங்கி வைத்தார். இதில் ஆக்சிலியம் மகளிர் கல்லூரியின் முதல்வர் ஜெயசாந்தி உள்ளிட்டோரும் பல மாநிலங்களை சேர்ந்த சிறைத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்

 இக்கூட்டத்தில் சிறை மற்றும் சீர் திருத்த நிர்வாக பயிலகத்தின் இணை இயக்குநர் பாஸ்கர் பேசுகையில் கல்வித்துறை தொழில் துறை மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத்துறைகளிலும் தொழில் நுட்பத்தின் பங்கு என்பது இன்றியமையாததாக உள்ளது. எனவே சிறைகள் நிர்வாகத்திலும் தொழில் நுட்ப பயன்பாடு, அவற்றால் என்னென்ன நன்மைகள் அதி நவீன தொழில் நுட்பங்களை எவ்வாறு கையாள்வது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென பேசினார்.