செய்தித் துறை அரசு செயலாளர் வேலூரில் ஆய்வு! ஆட்சியர் பங்கேற்பு!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் டாக்டர்.செல்வராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றங்கரையில் அமைந்துள்ள இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்ரம ராஜ சிங்கன் அவர்களின் நினைவிடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இலங்கையை ஆண்ட கடைசி தமிழ்மன்னன் விக்கிரமராஜ சிங்கேவின் சமாதி முத்து மண்டபமாக கட்டி தற்போது அதை நினைவிடமாக
அரசு பராமரித்து வருகிறது, இந்த நிலையில் முத்து மண்டபத்தை மேம்படுத்துவது குறித்து அதன் வரலாற்று சிறப்புகளை பாதுகாத்து மேலும் மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இன்று தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை செயலாளர் டாக்டர் செல்வராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் முத்து மண்டபத்தினுள் ஆய்வினை செய்தனா.¢
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.அ.சுகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தி துறை சார்பில் கண்காட்சி.
வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியம் மகிமண்டலம் ஊராட்சிக்குட்பட்ட திகுலப்பள்ளி சிற்றூராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை மகிமண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.பிரியதர்ஷினி நந்தகுமார், துணை தலைவர் திருமதி.மஞ்சுளா மற்றும் பொதுமக்களுடன் பார்வையிட்டனர்.
வீட்டுமனை பட்டா.
வருவாய்த் துறையின் சார்பில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் மற்றும் பட்டா பிழை திருத்தம் தொடர்பாக சிறப்பு பட்டா முகாம் நடைபெறுவதை தொடர்ந்து இன்று (10.08.2023) வேலூர் வட்டம், சத்துவாச்சாரி உள்வட்டம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் சிறப்பு பட்டா முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.