ஒய்வு பெறும் நேரத்தில் தேடி வந்த மாநில  தேர்தல் ஆணையர் பதவி!

ஒய்வு பெறும் நேரத்தில் தேடி வந்த மாநில  தேர்தல் ஆணையர் பதவி!

 உ.சசிகுமார்,

  வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலராக உள்ள பா.ஜோதி நிர்மலாசாமி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை இந்த பதவிக்கு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்திருப்பதாக அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

  தற்போது மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஜோதி நிர்மலாசாமி வரும் மே மாதம் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் தான் அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.  இப்பதவியில் அவர் பதவியேற்ற நாளில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

   அதே போல முன்னதாக ஜோதி நிர்மலாசாமி தமிழ்நாட்டினுடைய மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

  மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலத்தை பதவியேற்றதில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை என்று தமிழக அரசு உயர்த்தியது. இந்த சூழலில், ஏற்கெனவே மாநில தேர்தல் ஆணையராக இருந்த பழனிக்குமார் கடந்த மார்ச் 9-ம் தேதி ஓய்வு பெற்றார் என்பது நினைவு கூறத்தக்கதாகும்.