ஒலிம்பிக் போட்டிகளில் சிலம்பம்!

ஒலிம்பிக் போட்டிகளில் சிலம்பம்!

 கு.அசோக்,

  வேலூர்மாவட்டம்,வேலூரில் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் உலக சிலம்பம் சங்கம் சார்பில் வடக்கு மண்டல அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றதுஇதில்வேலூர்,ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,திருவண்ணாமலை,காஞ்சிபுரம்,சென்னை ,திருவள்ளூர் ,செங்கல்பட்டு,விழுப்புரம்,அரியலூர்,திருவாரூர்,கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சிலம்பம் விளையடடு வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

  800-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்ட இந்த போட்டியினை சிலம்பம் சங்க மாநில தலைவர் சுதாகரன் துவங்கி வைத்தார்.

   இதில் சிலம்பம் சங்க நிர்வாகி உமாநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, பரிசுகளையும் சான்றுகளையும் வழங்கினார்கள்.

  பின்னர் சிலம்பம் சங்க மாநில தலைவர் சுதாகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் வடக்கு மண்டல அளவிலான சிலம்பம் போட்டிகள் வேலூரில் நடக்கிறது. சிலம்பத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்து 3 சதவிகித இட ஒதுக்கீடு அளித்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

 இந்த சிலம்பம் போட்டியை கேலோ இந்தியாவில் இணைக்க தமிழக அரசு முயற்சி செய்து மத்திய அரசும் ஒப்புகொண்டுள்ளது.

 விரைவில் ஒலிம்பிக் அளவில் போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

 தமிழக அரசுக்கு நன்றி மேலும் பள்ளிகளிலும் இதனை கட்டாயப்பாடமாக்க உத்தரவிடப்பட்டுள்ளது இதன் மூலம் சிறந்த சிலம்பம் விளையாட்டு வீரர்கள் உருவாவார்கள் என்று கூறினார்.

  குறிப்பு:- சிலம்பம் கற்று கொடுப்பதாக கூறி பலபேர் பணம் பறித்து வருகிறார்கள். கின்னஸ் சாதனை, அந்த சாதனை, இந்த சாதனை என்று பணம் பிடுங்குகிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் முறையாக சிலம்பம் பயின்றவர்கள் கிடையாது. இதில் ஏழை குடும்பங்கள் சிக்கி தவிக்கின்றனர். இதை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கண்டறிந்து களையெடுக்க வேண்டும்.