ஓப்பனிங்கிற்காக காத்திருக்கும் தங்கும் விடுதிகள்!

ஓப்பனிங்கிற்காக காத்திருக்கும் தங்கும் விடுதிகள்!

ஜான்.மரியஜோசப்,

உள்நோயாளிகளுடன் வருவோர் தங்குவதற்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பில் விடுதி கட்டப்பட்டது.

   இதனை கடந்த டிசம்பர் 30-ந்தேதி தேதி அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார். இந்த நிலையில் திறந்து வைத்து பல நாட்கள் ஆன நிலையில், இன்னும் அந்த காத்திருப்போர் தங்கும் விடுதி வளாகம் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.

   இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:- காத்திருப்போர் தங்கும் விடுதி வளாகத்தை பராமரிப்பு பணி மேற்கொள்ள, தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு வந்து பொறுப்பேற்றுக் கொள்வார்கள். அதன் பின்னர் காத்திருப்போர் தங்கும் விடுதி செயல்படும் என சொல்கிறார்கள்.

  மேற்படி கட்டிடம் சரிவர கட்டபடாததால் இந்த சிரமம் என்று கூறப்பட்ட நிலையில் நகராட்சி நிர்வாகம் இப்படியொரு விளக்கத்தை அளித்திருக்கிறது.