நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்:-டிஜிபி உத்தரவு!

துரை.குணா,
நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த வழக்கை சிபிசிஐடி போலிசுக்கு மாற்றம்செய்து டிஜிபி சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதுபற்றின விவரம் வருமாறு,
புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த மாதம் 26-ம்தேதி மனிதக்கழிவை சில சமூக விரோதிகள் கலந்துவிட்டனர்.
இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து, இறையூர் அய்யனார் கோயிலுக்குள் வேங்கைவயல் பகுதி மக்களை செல்லவிடாமல் தடுத்தது, இரட்டைக்குவளை முறை பின்பற்றப்பட்டது குறித்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை விரைவில் பிடிக்க ஏதுவாக விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.