மனிதாபிமான மருத்துவர்கள்!வழியனுப்பிய கலெக்டர்!

மனிதாபிமான மருத்துவர்கள்!வழியனுப்பிய கலெக்டர்!

   ஜி.கே.சேகரன்,

   ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண்மணிக்கு மனநல பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் புரணகுணமடைந்த நிலையில் அவரை மாவட்ட ஆட்சியர் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைத்தார்.

 இராணிப்பேட்டை மாவட்டம்,ஒடிசா மாநிலம் சத்திரபூர் காஞ்சம் பகுதியை சேர்ந்தவர் ஜகநாத் ராவ் என்பவரின் மகள் ஜோதி வயது 22 இவர் அந்த மாநிலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த நிலையில் வீட்டில்  இருந்த பெற்றோர்கள் தன் கண்முன்னே தகாத வார்த்தைகளால் பேசி கொண்டு இருந்தனர்.

  இதனால் மனமுடைந்து பெண் ஜோதி ஒரிஸா  ரயில் நிலையத்தில் ரயில் ஏறி காட்பாடி வந்த அவர் அங்கு இருந்த ரயில்வே போலீசார் இவரை அழைத்து விசாரணை செய்த போது அந்த பெண் மனநல பாதிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர்.

 இது குறித்து, ரயில்வே போலீசார் வாலாஜாபேட்டை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தனர்.

 அங்கு வந்த மனநல மருத்துவர்கள் குழு உதவியுடன் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்று 6 மாதங்களாக சிகிச்சை அளித்தனர்.

  பின்னர் தற்போது அவர் புரணகுணமாகிய நிலையில் அவரை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப. அவர்களிடம் அழைத்து சென்று அவரது தாயார் ஜோதி  ஆகியோரை ஒரிஷா மாநிலத்துக்கு வழி அனுப்பி வைத்தனர்..

இந்த நிகழ்வில் மாவட்ட  மருத்துவ இயக்குனர் லட்சுமணன்  வாலாஜா  மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷா நந்தினி  மனநல மருத்துவர்கள்  சிவாஜிராவ்,தினேஷ் பாபு, சரவணகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.